தௌஹீத் ஜமாஅத் அறிமுகம்:- 1948ம் ஆண்டு அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் (தர்வேஷ் ஹாஜியார்) என்பவர் மூலம் அறிமுகமானது. அவரினால் ஸ்தாபிக்கப்பட்டதே "ஜம்இய்யது அன்ஸாரிய ஸுன்னதில் முஹம்மதியா" எனும் அமைப்பாகும். இதுவே இலங்கையில் தௌஹீத் கோட்பாடு பரவுவதற்கு முன்னோடியாக இருந்த அமைப்பாகும். தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணியினை பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1). முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போதே இஸ்லாம் முற்றுப் பெற்று விட்டது. இதன் அடிப்படை மூலாதாரங்கள் அல் குர்ஆனும், ஸுன்னாவுமே. இது இரண்டினையும் தவிர வேறு எந்த மனிதரது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் பின்பற்றக் கூடாது. 2). நபியவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாம் மார்க்கத்தில் எவையெல்லாம் நன்மை தரும் எனக் கருதி புதிதாக சேர்க்கப்பட்டதோ அவை அனைத்தும் தெளிவான பித்அத்துக்களே. 3). வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக யாரையாவது பங்காளியாக்குவது பெரும் பாவமாகும். அதனை அவன் என்றுமே மன்னிக்கமாட்டான். மகான்கள், அவ்லியாக்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதும், பெரியோர்களின் ஸியாரம் மீது பரிந்துரைத்து கந்தூரி கொடுத்து விழாக் க...