Skip to main content

உமையா ஆட்சி எவ்வாறு தோற்றம் பெற்றது???

 உமையா ஆட்சின் தோற்றம்




முஆவியா (ரழி) அவர்களால் ஹிஜ்ரி 41ல் உமையா கிலாபத் தோற்றுவிக்கப்பட்டது.

அறேபியாவில் குறைஷிக்குலத்தினர் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு குலத்தினர்களாக காணப்பட்டனர்.

அக்குலத்தில் முக்கிய ஒருவராக விளங்கிய அப்துல் மனாப் என்பவருக்கு ஹாஷிம், அப்துஷ்ஷம்ஸ் எனும் இரு புத்திரர்கள் இருந்தனர். இவர்களில் ஹாஷிமுடைய சந்ததியினர் ஹாஷிமியாக்கள் எனவும், அப்துஷ் ஷம்ஸுடைய மகனாகிய உமையாவுடைய சந்ததியினர் உமையாக்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.


அலி (ரழி) அவர்களுக்குப் பிறகு உமையா வம்சத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியதால் அவர்களது ஆட்சிக் காலத்தை உமையா கிலாபத் என அழைப்பர்.


நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே உமையா பிரமுகர்கள் பலர் பல முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டு வந்துள்ளனர்.

உதாரணமாக

🔴 உமையாவின் பேரரான அபூஸுப்யானுக்கு மகனாகப் பிறந்த முஆவியா (ரழி) நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வஹீ எழுதுபவர்களில் ஒருவராகக் கடமையாற்றினார்.


🔴 முதலாம் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் உதவிப்படையொன்றின் தளபதியாக இவரை நியமித்து சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.


🔴 உமர் (ரழி) இவரை சிரியாவிலுள்ள ஜோர்தான் எனும் மாவட்டத்திற்கு அதிபதியாக நியமித்தார்.


🔴 உஸ்மான் (ரழி) யின் ஆட்சிக் காலத்தில் சிரியா முழுவதற்குமான மாகாண கவர்ணராக நியமிக்கப்பட்டார்.


தொடர்ந்து பல வருடங்கள் சிரியாவில் பணி புரிந்து மக்கள் நலன்களில் பங்கெடுத்ததால் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த முஆவியா (ரழி) உஸ்மான் (ரழி) யின் கொலையைத் தனது அரசியல் எதிர்காலத்துக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். இதனால் உஸ்மான் (ரழி) யின் கொலைகாரர்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கலீபா அலி (ரழி) அவர்களுடன் சிப்பீன் களத்தில் போரிட்டார்.


நான்காவது கலீபா அலி (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 40ல் கொலை செய்யப்பட்டதும் அவர்களது மகன் ஹஸன் (ரழி)யை கூபா நகர மக்கள் கலீபாவாகத் தெரிவு செய்து அவருக்கு பைஅத் செய்தனர். மக்கா, மதீனா மக்களும் இத்தெரிவை அங்கீகரித்திருந்தனர்.

இந்நிலையில் சிரியாவில் தன்னைத்தானே கலீபாவாகப் பிரகடனப்படுத்தியிருந்த முஆவியா (ரழி) இராச்சியம் முழுவதற்கும் தானே கலீபாவாக வேண்டும் என்ற நோக்கில் கூபாவை நோக்கி படையெடுத்து சென்றார்.


இதையறிந்த ஹஸன் (ரழி) யுத்தத்தை விரும்பாது முஆவியா (ரழி)யுடன் சமாதான உடன்பாடு செய்து ஆட்சிப் பொறுப்பை அவருக்கு விட்டுக் கொடுத்தார். அது முதல் முஆவியா (ரழி) இஸ்லாமிய இராச்சியம் முழுவதினதும் கலீபாவானார்.


மிகச் சிறப்பான முறையில் தனது ஆட்சியை மேற்கொண்டு வந்த அவர் தனது மரணத் தறுவாயில் தனது மகன் யஸீதை கலீபாவாக்கியதன் மூலம் உமையாக்களின் பரம்பரை ஆட்சியைத் தோற்றுவித்துக்கொண்டார்கள்.









MSM Imthihas
Paragahakotuwa 


Comments

Popular posts from this blog

கிலாபத் என்றால் என்ன? || What is Khilafat?

  கிலாபத் என்றால் என்ன? || What is Khilafat? 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥  மக்களாட்சியை அல்லது பிரதிநிதித்துவ ஆட்சியை "கிலாபத்" எனப்படுகின்றது.         அதாவது மக்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற வகையில் அவர்கள் மீது கட்டாயப்படுத்தியுள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியுள்ளனர். சாத்தியமாகாத நிலையில் தமக்குள் தலைவரை தெரிவு செய்து அவருக்கு பரிபாலன உரிமையை வழங்குகின்ற ஆட்சி முறை கிலாபத் எனப்படுகிறது. பொதுவாக நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் இடம் பெற்ற கலீபாக்களின் ஆட்சியைக் குறிக்கவே இப்பதம் கையாளப்படுகிறது. 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 "முல்கியத்" என்றால் என்ன? மன்னர் ஆட்சி முறையை அல்லது பரம்பரை ஆட்சி முறையை ' முல்கியத் " என அழைக்கப்படுகிறது. அதாவது வாரிசுரிமை அடிப்படையில் ஆட்சித்தலைவர் தெரிவு செய்யப்பட்டு பரிபாலனம் செய்யப்படுகின்ற ஆட்சி ஒழுங்கு முல்கியத் எனப்படுகிறது. 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥...

இஸ்லாமிய நாகரீகத்தின் சிறப்பியல்புகள்

  இஸ்லாமிய நாகரீகமானது அதனை பிற சமூக, சமுதாய, நாகரீகங்களுடன் ஒப்பிடுகின்ற போது பல் சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குவதை அவதானிக்கலாம். அச் சிறப்பியல்புகளைப் பின்வருமாறு நோக்கலாம். இஸ்லாமிய நாகரிகம் அல்லாஹ்வினால் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் நடைமுறை மூலம் திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இத் தனித் தன்மை மானிட சமூகத்தில் எவ்விதச் இடைச் செருகல்களும்  இன்றி மனிதனின் மனோ இச்சைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்து வழி காட்டுகின்றது. இஸ்லாம் என்ற விரிந்த, செறிவான கொள்கைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த ஓர் நாகரிகமாக விளங்கி வருகின்றது. ஏனைய நாகரிகங்களை நோக்கின் அவை யாவும் தீர்க்க தரிசனமற்ற முறையில், திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பபட்டது. வதிவிடம், அரசியல் செல்வாக்கு, பிற கலாசாரத் தாக்கம் என்பவற்றின் துணை கொண்டு சுயமாக உருவாகி இருப்பதைக் காணலாம். இஸ்லாம் என்ற சொல்லே ஒரு பொதுவான சொல்லாக அமைந்து இதன் சிறப்பை வெளிப்படுத்துகின்றது. இஸ்லாமிய நாகரிகம் சகல துறைகளிலும் வழிகாட்டல்களை வழங்கும் நாகரிகமாக உள்ளது. ஏனெனில் ஏனைய நாகரிகங்கள் வாழ்வின் சில துறைக்களுக்கே அதன் வழி காட்டல...

தௌஹீத் ஜமாஅத் || Thowheed jamath

  தௌஹீத் ஜமாஅத் அறிமுகம்:- 1948ம் ஆண்டு அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் (தர்வேஷ் ஹாஜியார்) என்பவர் மூலம் அறிமுகமானது. அவரினால் ஸ்தாபிக்கப்பட்டதே "ஜம்இய்யது அன்ஸாரிய ஸுன்னதில் முஹம்மதியா" எனும் அமைப்பாகும். இதுவே இலங்கையில் தௌஹீத் கோட்பாடு பரவுவதற்கு முன்னோடியாக இருந்த அமைப்பாகும். தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணியினை பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1). முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போதே இஸ்லாம் முற்றுப் பெற்று விட்டது. இதன் அடிப்படை மூலாதாரங்கள் அல் குர்ஆனும், ஸுன்னாவுமே. இது இரண்டினையும் தவிர வேறு எந்த மனிதரது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் பின்பற்றக் கூடாது. 2). நபியவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாம் மார்க்கத்தில் எவையெல்லாம் நன்மை தரும் எனக் கருதி புதிதாக சேர்க்கப்பட்டதோ அவை அனைத்தும் தெளிவான பித்அத்துக்களே. 3). வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக யாரையாவது பங்காளியாக்குவது பெரும் பாவமாகும். அதனை அவன் என்றுமே மன்னிக்கமாட்டான். மகான்கள், அவ்லியாக்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதும், பெரியோர்களின் ஸியாரம் மீது பரிந்துரைத்து கந்தூரி கொடுத்து விழாக் க...