Skip to main content

ரமழான் கடைசி 10 (https://imthihas2.blogspot.com)

 அல்லாஹ் இவ்வுலகை படைத்து அவனை வணங்கும்படி மனிதர்களையும் ஜின்களையும் படைத்தான்.

 இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்

1) கலிமா

2) தொழுகை

3) ஸக்காத் 

4) நோன்பு

5) ஹஜ்


நோன்பு

 இஸ்லாத்தின் நான்காவது கடமையாக நோன்பு காணப்படுகிறது.  இஸ்லாமிய கணக்கின்படி ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.


ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)

நூல்கள்: புகாரீ (1898)


மேலும் ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.


ரமழான் மாதம் எப்படி என்றால்!..

நேர்வழியை தெளிவுபடுத்தி (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டக்கூடிய குர்ஆன் அம்மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழியாக அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர்கள் அதில் நோன்பு நோற்க வேண்டும். நோயாளியாகவோ பயனியாகவோ இருப்பவர்கள் வேறு ஒரு நாளில் (விடுபட்ட நோன்புகளை) நோற்கட்டும்…. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தி நன்றி செலுத்த வேண்டும்.

அல்குர்ஆன் (2 : 186)


 இந்த ரமழானை மூன்று கட்டங்களாக 10 து 10 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதிப் பத்து பற்றி பார்ப்போம்.


* இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின்,

முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!

ஸஹீஹ் புகாரி

* இந்த மகத்துவமிக்க இரவு எந்தநாளில் வரும் என்பதை சொல்லாமல் பொதுவாக நபிகள் நாயகம்(ஸல்) ரமலான் கடைசி பத்து நாட்களில் அதுவும் ஒற்றைப்படையில் தேடுங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்...

எமது இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில்



 ஒற்றை இரவுகளாக காணப்படுகின்றது.

* ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஒரு நாளான லைலத்துல் கத்ருடைய இரவு ரமழான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் ஏதே ஒரு இரவில் உள்ளது என்பதனால் இஸ்லாமியர் ஆகிய நாங்கள் ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து இரவுகளில் லைலத்தில் கதிர் உடைய இரவை அடைவதற்காக வேண்டி அமல்களில் ஈடுபட வேண்டும்.

* நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரமழான் கடைசி 10 நாட்களில் இஃதிகாஃப் இருக்கக்கூடியவர்களா இருந்துள்ளார்கள்,



 எனவே நாம் அதிக அதிகமாக நன்மைகளை செய்து அதிக அதிகமாக பாவ மன்னிப்பை தேடி மாத்துவமான இம்மாதத்தை சிறப்பாக நன்மையான காரியங்களில் செலவழித்து ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் சுவர்க்கத்தை அடைவதற்கு அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


MSM இம்திஹாஸ்
பரகஹகொடுவ,


Comments

Popular posts from this blog

கிலாபத் என்றால் என்ன? || What is Khilafat?

  கிலாபத் என்றால் என்ன? || What is Khilafat? 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥  மக்களாட்சியை அல்லது பிரதிநிதித்துவ ஆட்சியை "கிலாபத்" எனப்படுகின்றது.         அதாவது மக்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற வகையில் அவர்கள் மீது கட்டாயப்படுத்தியுள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியுள்ளனர். சாத்தியமாகாத நிலையில் தமக்குள் தலைவரை தெரிவு செய்து அவருக்கு பரிபாலன உரிமையை வழங்குகின்ற ஆட்சி முறை கிலாபத் எனப்படுகிறது. பொதுவாக நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் இடம் பெற்ற கலீபாக்களின் ஆட்சியைக் குறிக்கவே இப்பதம் கையாளப்படுகிறது. 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 "முல்கியத்" என்றால் என்ன? மன்னர் ஆட்சி முறையை அல்லது பரம்பரை ஆட்சி முறையை ' முல்கியத் " என அழைக்கப்படுகிறது. அதாவது வாரிசுரிமை அடிப்படையில் ஆட்சித்தலைவர் தெரிவு செய்யப்பட்டு பரிபாலனம் செய்யப்படுகின்ற ஆட்சி ஒழுங்கு முல்கியத் எனப்படுகிறது. 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥...

இஸ்லாமிய நாகரீகத்தின் சிறப்பியல்புகள்

  இஸ்லாமிய நாகரீகமானது அதனை பிற சமூக, சமுதாய, நாகரீகங்களுடன் ஒப்பிடுகின்ற போது பல் சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குவதை அவதானிக்கலாம். அச் சிறப்பியல்புகளைப் பின்வருமாறு நோக்கலாம். இஸ்லாமிய நாகரிகம் அல்லாஹ்வினால் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் நடைமுறை மூலம் திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இத் தனித் தன்மை மானிட சமூகத்தில் எவ்விதச் இடைச் செருகல்களும்  இன்றி மனிதனின் மனோ இச்சைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்து வழி காட்டுகின்றது. இஸ்லாம் என்ற விரிந்த, செறிவான கொள்கைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த ஓர் நாகரிகமாக விளங்கி வருகின்றது. ஏனைய நாகரிகங்களை நோக்கின் அவை யாவும் தீர்க்க தரிசனமற்ற முறையில், திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பபட்டது. வதிவிடம், அரசியல் செல்வாக்கு, பிற கலாசாரத் தாக்கம் என்பவற்றின் துணை கொண்டு சுயமாக உருவாகி இருப்பதைக் காணலாம். இஸ்லாம் என்ற சொல்லே ஒரு பொதுவான சொல்லாக அமைந்து இதன் சிறப்பை வெளிப்படுத்துகின்றது. இஸ்லாமிய நாகரிகம் சகல துறைகளிலும் வழிகாட்டல்களை வழங்கும் நாகரிகமாக உள்ளது. ஏனெனில் ஏனைய நாகரிகங்கள் வாழ்வின் சில துறைக்களுக்கே அதன் வழி காட்டல...

தௌஹீத் ஜமாஅத் || Thowheed jamath

  தௌஹீத் ஜமாஅத் அறிமுகம்:- 1948ம் ஆண்டு அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் (தர்வேஷ் ஹாஜியார்) என்பவர் மூலம் அறிமுகமானது. அவரினால் ஸ்தாபிக்கப்பட்டதே "ஜம்இய்யது அன்ஸாரிய ஸுன்னதில் முஹம்மதியா" எனும் அமைப்பாகும். இதுவே இலங்கையில் தௌஹீத் கோட்பாடு பரவுவதற்கு முன்னோடியாக இருந்த அமைப்பாகும். தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணியினை பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1). முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போதே இஸ்லாம் முற்றுப் பெற்று விட்டது. இதன் அடிப்படை மூலாதாரங்கள் அல் குர்ஆனும், ஸுன்னாவுமே. இது இரண்டினையும் தவிர வேறு எந்த மனிதரது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் பின்பற்றக் கூடாது. 2). நபியவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாம் மார்க்கத்தில் எவையெல்லாம் நன்மை தரும் எனக் கருதி புதிதாக சேர்க்கப்பட்டதோ அவை அனைத்தும் தெளிவான பித்அத்துக்களே. 3). வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக யாரையாவது பங்காளியாக்குவது பெரும் பாவமாகும். அதனை அவன் என்றுமே மன்னிக்கமாட்டான். மகான்கள், அவ்லியாக்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதும், பெரியோர்களின் ஸியாரம் மீது பரிந்துரைத்து கந்தூரி கொடுத்து விழாக் க...