Skip to main content

கலீபா உமர் (ரலி) எவ்வாரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்?? || History of Caliph Umar's (RA) Acceptance of Islam


🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

கலீபா உமர் (ரலி) எவ்வாரு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்?? || History of Caliph Umar (RALI) Acceptance of Islam 

🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥


நுபுவ்வத்தின் 6ம் ஆண்டில், குறைஷ் வர்க்கத்திலிருந்து  இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார் உமர் (ரலி). இவர் மிகப்பலம் வாய்ந்தவர்.


தாருந் நத்வா என்ற இடத்தில் குறைஷியர்கள் ஒன்றுகூடி நபி (ஸல்) அவர்களின் பிரசாரத்தைத் தடுக்குமுகமாக அவர்களைக் கொலை செய்வதற்கு முடிவு செய்தார்கள்.

இதன் பிரகாரம் நபி (ஸல்) அவர்களின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு பெறுமதி வாய்ந்த சன்மானம் வழங்குவதாக முடிவுசெய்யப்பட்டது. இதனால் தூண்டப்பட்டு அந்த சன்மானத்தை தான் பெறவேண்டும் என்பதற்காக உமர் (ரழி) அவர்கள் தங்களது வாளை உருவியவர்களாக நபியவர்கள் இருக்குமிடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.


அச்சந்தர்ப்பத்தில் அவ்வழியில் வந்த ஸஹாபி ஒருவரை உமர் (ரழி) அவர்கள் சந்தித்தார்கள். அவ்வேளை அந்த ஸஹாபி உமர் (ரழி) அவர்களிடம்

 உமரே நீர் எங்கே செல்கின்றீர்?? என்று செல்லுமிடம் பற்றி வினவிய போது உமர் (ரழி) அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களின் கழுத்தை வெட்டி எடுப்பதற்காக சென்று கொண்டிருக்கின்றேன் எனக் கூறினார்கள்.

அதற்கு அந்த ஸஹாபி முதலில் உங்களது வீட்டுக்குச் சென்று பாருங்கள் என்று குறிப்பிட்டார்.


இவரது வார்த்தையை கேட்டு உமர் (ரழி) அவர்கள் தன் வீட்டுக்குச் சென்ற போது அங்கு தன் தங்கையும், அவரது கணவரும் அல்குர்ஆனை ஓதிக்கொண்டிருந்ததை செவியுற்றார்கள்.


 முதலில் ஆத்திரமுற்ற உமர் அவர்கள் பின் அதனை தனக்கும் கற்றுத்தருமாறு வினவினார்கள். இவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தங்கை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பணித்தார்கள்.

இதனை ஏற்ற உமர் அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.


இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்காக இறைவனிடம் கேட்ட துஆ அங்கீகரிக்கப்பட்டது.


இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ரழியல்லாஹு அன்ஹு (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்.அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்) என்ற உயர் பாக்கியத்தை பெற்றுக்கொண்டார்கள்.

🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

உமர் (ரலி) அவர்கள் எவ்வாறு கலீபா ஆனார்??

🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

இஸ்லாமியக் குடியரசின் முதலாவது கலீபாவான அபூபக்கர் (ரழி) அவர்களின் மரணத்தை தொடர்ந்து கலீபா உமர் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 13ல் விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டார்கள்..


தனது இறுதி நாள் நெருங்கி விட்டதை மானசீகமாக அறிந்துகொண்ட அபூபக்கர் தனக்குப்பின்னர் இஸ்லாமிய அரசை பொறுப்பேற்று நடாத்த வேறொருவரை கலீபாவாக நியமிப்பதன் அவசியத்தை உணர்ந்தார்.


அதற்கு உமரே தகுதியானவர் என்று கருதினார். தனது கருத்தை தோழர்களிடமும், முக்கியமானவர்களிடமும் தெரிவித்தார். அவர்களும் ஏற்றுக்கொள்ளவே


 உஸ்மான் (ரழி) அவர்களை அழைத்து அடுத்த கலீபாவாக உமர் (ரழி) அவர்களை நியமிப்பதாக நியமனப்பத்திரம் ஒன்றை எழுதி பொதுமக்கள் மத்தியில் வாசித்துக் காட்டச் செய்தார்.


இதனைத் தொடர்ந்து எல்லோரும் உமர் (ரழி) அவர்களுக்கு பைஅத் செய்து கொடுத்தனர். இதன் மூலம் ஹிஜ்ரி 13ல் உமர் (ரழி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலீபாவாக தெரிவு செய்யப்பட்டார்கள்.


🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧🚧

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

MSM IMTHIHAS
PARAGAHAKOTUWA 

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍


Comments

Popular posts from this blog

கிலாபத் என்றால் என்ன? || What is Khilafat?

  கிலாபத் என்றால் என்ன? || What is Khilafat? 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥  மக்களாட்சியை அல்லது பிரதிநிதித்துவ ஆட்சியை "கிலாபத்" எனப்படுகின்றது.         அதாவது மக்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற வகையில் அவர்கள் மீது கட்டாயப்படுத்தியுள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியுள்ளனர். சாத்தியமாகாத நிலையில் தமக்குள் தலைவரை தெரிவு செய்து அவருக்கு பரிபாலன உரிமையை வழங்குகின்ற ஆட்சி முறை கிலாபத் எனப்படுகிறது. பொதுவாக நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் இடம் பெற்ற கலீபாக்களின் ஆட்சியைக் குறிக்கவே இப்பதம் கையாளப்படுகிறது. 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 "முல்கியத்" என்றால் என்ன? மன்னர் ஆட்சி முறையை அல்லது பரம்பரை ஆட்சி முறையை ' முல்கியத் " என அழைக்கப்படுகிறது. அதாவது வாரிசுரிமை அடிப்படையில் ஆட்சித்தலைவர் தெரிவு செய்யப்பட்டு பரிபாலனம் செய்யப்படுகின்ற ஆட்சி ஒழுங்கு முல்கியத் எனப்படுகிறது. 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥...

இஸ்லாமிய நாகரீகத்தின் சிறப்பியல்புகள்

  இஸ்லாமிய நாகரீகமானது அதனை பிற சமூக, சமுதாய, நாகரீகங்களுடன் ஒப்பிடுகின்ற போது பல் சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குவதை அவதானிக்கலாம். அச் சிறப்பியல்புகளைப் பின்வருமாறு நோக்கலாம். இஸ்லாமிய நாகரிகம் அல்லாஹ்வினால் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் நடைமுறை மூலம் திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இத் தனித் தன்மை மானிட சமூகத்தில் எவ்விதச் இடைச் செருகல்களும்  இன்றி மனிதனின் மனோ இச்சைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்து வழி காட்டுகின்றது. இஸ்லாம் என்ற விரிந்த, செறிவான கொள்கைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த ஓர் நாகரிகமாக விளங்கி வருகின்றது. ஏனைய நாகரிகங்களை நோக்கின் அவை யாவும் தீர்க்க தரிசனமற்ற முறையில், திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பபட்டது. வதிவிடம், அரசியல் செல்வாக்கு, பிற கலாசாரத் தாக்கம் என்பவற்றின் துணை கொண்டு சுயமாக உருவாகி இருப்பதைக் காணலாம். இஸ்லாம் என்ற சொல்லே ஒரு பொதுவான சொல்லாக அமைந்து இதன் சிறப்பை வெளிப்படுத்துகின்றது. இஸ்லாமிய நாகரிகம் சகல துறைகளிலும் வழிகாட்டல்களை வழங்கும் நாகரிகமாக உள்ளது. ஏனெனில் ஏனைய நாகரிகங்கள் வாழ்வின் சில துறைக்களுக்கே அதன் வழி காட்டல...

தௌஹீத் ஜமாஅத் || Thowheed jamath

  தௌஹீத் ஜமாஅத் அறிமுகம்:- 1948ம் ஆண்டு அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் (தர்வேஷ் ஹாஜியார்) என்பவர் மூலம் அறிமுகமானது. அவரினால் ஸ்தாபிக்கப்பட்டதே "ஜம்இய்யது அன்ஸாரிய ஸுன்னதில் முஹம்மதியா" எனும் அமைப்பாகும். இதுவே இலங்கையில் தௌஹீத் கோட்பாடு பரவுவதற்கு முன்னோடியாக இருந்த அமைப்பாகும். தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணியினை பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1). முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போதே இஸ்லாம் முற்றுப் பெற்று விட்டது. இதன் அடிப்படை மூலாதாரங்கள் அல் குர்ஆனும், ஸுன்னாவுமே. இது இரண்டினையும் தவிர வேறு எந்த மனிதரது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் பின்பற்றக் கூடாது. 2). நபியவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாம் மார்க்கத்தில் எவையெல்லாம் நன்மை தரும் எனக் கருதி புதிதாக சேர்க்கப்பட்டதோ அவை அனைத்தும் தெளிவான பித்அத்துக்களே. 3). வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக யாரையாவது பங்காளியாக்குவது பெரும் பாவமாகும். அதனை அவன் என்றுமே மன்னிக்கமாட்டான். மகான்கள், அவ்லியாக்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதும், பெரியோர்களின் ஸியாரம் மீது பரிந்துரைத்து கந்தூரி கொடுத்து விழாக் க...