Skip to main content

ஜனாஸாவுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்

ஜனாஸாவுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்


நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..

ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான கவலையான நேரம் எது?


கவலையான நேரம் எது?

ஆயிஷா(ரலி):- யா ரஸூல்லாஹ் அந்தமையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும் நேரம்

நபி(ஸல்):- "இல்லை"


ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில் அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு வருகிறோமே அதுதான் துயரமானது.

நபி(ஸல்): "இல்லை


ஆயிஷா(ரலி): நீங்களே சொல்லுங்கள் ரஸூலுல்லாஹ்

நபி(ஸல்):- ஒரு மனிதன் மரணித்துவிட்டால் ,

1) அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்தும் எலும்புகளிலிருந்தும் உயிர் பிரித்தெடுக்கப்படுகிறது.

அந்நேரத்தில் அந்த உடம்பு புன்னாய் போய்விடுகிறது. எந்த மைய்யத்தும் அதை தாங்காது.


2) அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன் சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது

"எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என் உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய் போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக நடந்துகொள். எனை இன்னும் நோகடித்து விடாதே எனக் கெஞ்சுகிறது" இந்நேரத்தில் மையத்து அதிகமாக கவலைபடுகிறது. (மையத்து என்றால் நாம்தான்)


3) அடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை ஊற்றிவிடாதே குளிர்ந்த நீரையும் ஊற்றிவிடாதெ எனது உடம்பு தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும் இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள். என்னிடம் மெதுவாக நடந்து கொள்ளுங்கள் எனக் கதறுகிறது. இச்சத்தத்தை மனிதர்களையும், ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும் கேட்கிறது.


4) அடுத்து கஃபனிடும்போது எனை கவனமாக தூக்குங்கள், ஏற்கனவே கவலையில் நொந்து போயிருக்கிறேன் . தயவு செய்து எனை கண்ணியமாக நடத்துங்கள்" எனக் கெஞ்சுகிறது.கவலை படுகிறது. அதனால்தான் குளிப்பாட்டும்போது குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற அவசரம் மய்யத்துக்கு கவலையாக அமையலாம்.


5) அடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது "எனை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை கட்டிவிடாதீர்கள்.

* முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள்

* அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக

* எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை பார்கணும்.இதற்குபின் இங்கு திரும்பி வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்" எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது.

என்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

சகோதரர்களே சகோதரிகளே... நாம் மரணத்தை அடிகடி நினைப்பது அமல் செய்வதை லேசாக்குகிறது. தொழுகையை லேசாக்குகிறது. குர்ஆன் ஓதுவதை லேசாக்குகிறது. நம் குடும்பத்தை நேரான வழியில் நடத்துவதை லேசாக்குகிறது. ஹராமை விட்டும் ஹராத்தை விட்டும் தவிர்பதை லேசாக்குகிறது.

இன்ஷா அல்லாஹ் நம் மரணமும் லேசாகும்.

நாம் அனைவரும் அடையவிருக்கும் மரணத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் லேசாக்கிவைப்பானாக..

நம் பாவங்களை மன்னிப்பானாக..

கப்ரின் வேதனையை விட்டு நீக்கியருள்வானாக..

ஆமீன்.🤲








Comments

Popular posts from this blog

கிலாபத் என்றால் என்ன? || What is Khilafat?

  கிலாபத் என்றால் என்ன? || What is Khilafat? 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥  மக்களாட்சியை அல்லது பிரதிநிதித்துவ ஆட்சியை "கிலாபத்" எனப்படுகின்றது.         அதாவது மக்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற வகையில் அவர்கள் மீது கட்டாயப்படுத்தியுள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியுள்ளனர். சாத்தியமாகாத நிலையில் தமக்குள் தலைவரை தெரிவு செய்து அவருக்கு பரிபாலன உரிமையை வழங்குகின்ற ஆட்சி முறை கிலாபத் எனப்படுகிறது. பொதுவாக நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் இடம் பெற்ற கலீபாக்களின் ஆட்சியைக் குறிக்கவே இப்பதம் கையாளப்படுகிறது. 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 "முல்கியத்" என்றால் என்ன? மன்னர் ஆட்சி முறையை அல்லது பரம்பரை ஆட்சி முறையை ' முல்கியத் " என அழைக்கப்படுகிறது. அதாவது வாரிசுரிமை அடிப்படையில் ஆட்சித்தலைவர் தெரிவு செய்யப்பட்டு பரிபாலனம் செய்யப்படுகின்ற ஆட்சி ஒழுங்கு முல்கியத் எனப்படுகிறது. 🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥...

இஸ்லாமிய நாகரீகத்தின் சிறப்பியல்புகள்

  இஸ்லாமிய நாகரீகமானது அதனை பிற சமூக, சமுதாய, நாகரீகங்களுடன் ஒப்பிடுகின்ற போது பல் சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குவதை அவதானிக்கலாம். அச் சிறப்பியல்புகளைப் பின்வருமாறு நோக்கலாம். இஸ்லாமிய நாகரிகம் அல்லாஹ்வினால் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் நடைமுறை மூலம் திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இத் தனித் தன்மை மானிட சமூகத்தில் எவ்விதச் இடைச் செருகல்களும்  இன்றி மனிதனின் மனோ இச்சைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்து வழி காட்டுகின்றது. இஸ்லாம் என்ற விரிந்த, செறிவான கொள்கைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த ஓர் நாகரிகமாக விளங்கி வருகின்றது. ஏனைய நாகரிகங்களை நோக்கின் அவை யாவும் தீர்க்க தரிசனமற்ற முறையில், திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பபட்டது. வதிவிடம், அரசியல் செல்வாக்கு, பிற கலாசாரத் தாக்கம் என்பவற்றின் துணை கொண்டு சுயமாக உருவாகி இருப்பதைக் காணலாம். இஸ்லாம் என்ற சொல்லே ஒரு பொதுவான சொல்லாக அமைந்து இதன் சிறப்பை வெளிப்படுத்துகின்றது. இஸ்லாமிய நாகரிகம் சகல துறைகளிலும் வழிகாட்டல்களை வழங்கும் நாகரிகமாக உள்ளது. ஏனெனில் ஏனைய நாகரிகங்கள் வாழ்வின் சில துறைக்களுக்கே அதன் வழி காட்டல...

தௌஹீத் ஜமாஅத் || Thowheed jamath

  தௌஹீத் ஜமாஅத் அறிமுகம்:- 1948ம் ஆண்டு அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் (தர்வேஷ் ஹாஜியார்) என்பவர் மூலம் அறிமுகமானது. அவரினால் ஸ்தாபிக்கப்பட்டதே "ஜம்இய்யது அன்ஸாரிய ஸுன்னதில் முஹம்மதியா" எனும் அமைப்பாகும். இதுவே இலங்கையில் தௌஹீத் கோட்பாடு பரவுவதற்கு முன்னோடியாக இருந்த அமைப்பாகும். தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணியினை பின்வருமாறு வகைப்படுத்தலாம். 1). முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போதே இஸ்லாம் முற்றுப் பெற்று விட்டது. இதன் அடிப்படை மூலாதாரங்கள் அல் குர்ஆனும், ஸுன்னாவுமே. இது இரண்டினையும் தவிர வேறு எந்த மனிதரது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் பின்பற்றக் கூடாது. 2). நபியவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாம் மார்க்கத்தில் எவையெல்லாம் நன்மை தரும் எனக் கருதி புதிதாக சேர்க்கப்பட்டதோ அவை அனைத்தும் தெளிவான பித்அத்துக்களே. 3). வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணையாக யாரையாவது பங்காளியாக்குவது பெரும் பாவமாகும். அதனை அவன் என்றுமே மன்னிக்கமாட்டான். மகான்கள், அவ்லியாக்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்களிடம் உதவி தேடுவதும், பெரியோர்களின் ஸியாரம் மீது பரிந்துரைத்து கந்தூரி கொடுத்து விழாக் க...